உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரையில் 15 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.
இதுவரையில் ரஷ்யா படையினர் 7000 முதல் 15 ஆயிரம் வரையிலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இதேவேளை, அப்பட்டமான பொய்களுடன் ரஷ்யாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி (65). சமீ
தவறுகளை சரி செய்வதற்கு கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தேவையால், ரஷ்ய
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித
உலகளவில் தற்போது 100,839,430 பேருக்கு கொரோனா வைரஸ்
கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள
உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
