உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.
மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.
4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறக்குமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, மரியுபோல் நகர வாசிகளை தங்கள் நாட்டிற்கு ரஷ்ய படைகள் நாடு கடத்தி வருவதாகவும், நகரல் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டுப்பட்டுள்ளது.
மேலும், மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்ய குண்டு போட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, மரியுபோலில் உள்ள பிரசவ மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் சர்வதேச அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரின் புகைப்படும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், நகரம் முழுவதும் சிதைந்து, கட்டிடங்கள் நொறுங்கி, ஆங்காங்கே கரும் புகை வருவதை காட்டுகிறது.
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய சபாநாயகருமான
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
உக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை
