ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடரும் நிலையில், தற்போது கோவில்களுக்கு அருகே இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டத்தில் கவுப் மாரிகுடி திருவிழாவின் போது, இந்து அல்லாத வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து படுபித்ரி கோவில் திருவிழாவிலும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு கோவில்களிலும் இதேபோன்ற பேனர்கள் காட்டப்பட்டிருந்தன.
இந்த எதிர்ப்பு தற்போது அம்மாநிலத்தின் மாண்டியா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, துமகுரு மற்றும் ஹாசன் போன்ற பகுதிகளிலும் பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோவில் அருகே முஸ்லிம் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மைசூரு பிரிவு, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சினை கர்நாடகா சட்டசபையில் எழுப்பப்பட்ட நிலையில், கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள தெருவோரங்களில் கடை வைத்திருக்கும் இந்து அல்லாத வியாபாரிகளுக்கு இது பொருந்தாது என்றும், அவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடகா மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ
உக்ரைன் எல்லையில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட படைகளை ரஷ
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
ரஷ்யாவுக்கு எதிராகப் பயன்படுத்த உலகின் அதிவேக ஏவுகணை
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர
