நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என தூய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சிரேஷ்ட அரசாங்கப் பதவிகளை வகிப்பதைத் தடுக்கும் அரசியலமைப்பின் 22வது திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
"எந்த ராஜபக்ச மன்னராக இருந்தாலும் இறுதியில் பசில் ராஜபக்சே நாட்டை ஆளுவார். இந்த நெருக்கடிக்கு தீர்வாக 22வது அரசியலமைப்பு திருத்தத்தை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்போம்."
"அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 70.1 எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று கூறுகிறது."
"நாடாளுமன்றத்தில் திடமான கோரம் 20 உள்ளது. 20 பேர் அமர்ந்து 11 பேர் விருப்பப்பட்டாலும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்." எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விரைவில் நாட்டின் "எதிர்கால தலைவரைபார்க்கலாம். பொறுமையாக இருங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இரு
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில்
நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதி
இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பி
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
