உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கள் இருவரை "துரோகிகள்" என்ற அடிப்படையில் பதவி நீக்கம் செய்ததாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
“எல்லா துரோகிகளையும் சமாளிக்க எனக்கு நேரம் இல்லை” ஆனால் அவர்கள் அனைவரும் படிப்படியாக தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரண்டு உயர் அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்ட அவர், உக்ரைனிய மக்களுக்கு விசுவாசமான இராணுவ உறுதிமொழியை மீறுபவர்கள் உயர் இராணுவ பதவிகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

இதேவேளை உக்ரைனில் இராணுவ நடவடிக்கை முற்றிலும் திட்டத்தின் படி இடம்பெறுகிறது.
எனினும் இந்தத் திட்டம் நாடாளுமன்றத்துடன் பகிரப்படவில்லை என்று ஜனாதிபதி புட்டினின் யுனைடெட் ரஸ்ய கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ விரும்பினால், இந்த நடவடிக்கையை விரைவாக செயற்படுத்த முடியும். ஆனால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க ரஸ்ய படைகள் கவனம் செலுத்துகின்றன என்று ரஸ்யாவின் ஸ்டேட் டுமாவின் உறுப்பினரான மரியா புட்டினா தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல்களை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,179 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 1,860 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எனினும் மரியுபோல் நகரில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்க
அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14
ரஷியா உக்ரைன் போர் கடந்த 75 நாளாக நடைபெற்று வருகிறது. ரஷ
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து
போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ தளம் மீது ரஷ்யா
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ப
