நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைதிருப்ப உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது 3 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டு தலைநகர் கீவிவை கைப்பற்றி போராடி வருகிறது.
அதேசமயம், ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் இராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரேனியர்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள சாலை குறியீடுகளில் இருந்து தெருக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை அகற்றுமாறு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கோரியுள்ளது.
இது எதிரியைக் குழப்பி திசைதிருப்பும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக உக்ரைனுக்குள் நுழைந்தள்ள எதிரியைக் குழப்புவதற்கும் திசைதிருப்புவதற்கும், உக்ரேனியர்கள் பிராந்தியங்களில் உள்ள தெருக்கள், நகரங்கள், கிராமங்களின் எண்கள் மற்றும் பெயர்கள் கொண்ட பலகைகளை அகற்றுமாறு என்று பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் வாயிலாக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைனிலிருந்து விரைவில் ரஷ்ய படைகளை விரட்ட நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா எ
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தே
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் கொரோனாத
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்
இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு
