ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், போரை நிறுத்தக்கோரி லில்லி என்ற சிறுமி, உலக தலைவர்களை கேட்டுக்கொண்ட வீடியோ சூறாவளியாய் இணையத்தை சுற்றிவருகிறது.
உக்ரைனை-ரஷ்யா தரை, கடல், வான் என அனைத்து விதங்களிலும் தாக்கி வருகிறது. மேலும் இந்த தாக்குதலால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில், மனிதாபிமானமற்ற இந்த போரை நிறுத்த கோரி லில்லி என்ற சிறுமி உலக தலைவர்களிடம் தனது இன்ஸ்டாகிராமின் வீடியோ பதிவு வாயிலாக கோரிக்கைவைத்துள்ளார்.
brittikitty என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக லில்லி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், எனக்கு உலகத்தின் ஒருபகுதி மட்டும் வேண்டாம், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய அமைதியான உலகம் வேண்டும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் அதனால் இந்த போரை நிறுத்தங்கள் என தனது மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுமார் 1.1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட brittikitty என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வையாளர்களை சூறாவளியாய் கடந்து உலக மக்கள் மற்றும் தலைவர்களிடம் அமைதியை கோரிவருகிறது.
https://www.instagram.com/p/Caaf6Smju5X/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர
