‘நேட்டோ விழித்தெழுந்து, இது ஒரு பிராந்திய மோதல் அல்ல. இது ஜனநாயகத்திற்கு எதிரான போர், சுதந்திரத்திற்கு எதிரான போர் என்பதை புரிந்து கொள்ளும் வரை, வானத்தில் இருந்து நமது குடிமக்களை புடின் கொல்வதைத் தடுக்க முடியாது’ என மரியுபோல் மேயர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் உக்கிர தாக்குதல்களை நடத்திவருவதால், உக்ரைனுக்குள் படைகளை அனுப்புமாறு நேட்டோ தலைவர்களை மரியுபோல் மேயர் செர்ஜி ஓர்லோவ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா, எமது நாட்டை பாலைவனமாக்கி பல பொதுமக்களைக் கொல்லும் வரை நிறுத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலின் தொடக்கத்திலிருந்து ரஷ்யப் படைகள், 30க்கும் மேற்பட்ட குடிமக்களின் தளங்களை குண்டுவீசித் தாக்கியுள்ளன என்று அந்நாட்டின் உட்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
எனினும் ‘ரஷ்யர்கள் தாங்கள் பொதுமக்கள் மீதோ பொருட்களையோ தாக்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உக்ரைனின் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் ரஷ்ய விமானப் படையினர் நடத்தியத் தாக்குதல்களில் 47பேர் உயிரிழந்துள்ளாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது முந்தைய எண்ணிக்கையான 33இல் இருந்து உயிரிழப்பு எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. உக்ரைனின் உள்ளூர் அவசர சேவைகளின் படி, கடுமையான ஷெல் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்க
இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ
அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி முதன்முதலில் மனிதனை
உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி இந்திய நேரப்ப
