More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: பாகிஸ்தானை ஊதி தள்ளி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: பாகிஸ்தானை ஊதி தள்ளி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
Mar 06
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை: பாகிஸ்தானை ஊதி தள்ளி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.



நியூசிலாந்தில் மார்ச் 4ம் திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.



இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.



ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் தலா ஒரு முறை மோதும். அதாவது, லீக் சுற்றில் ஒரு அணி 7 போட்டிகளில் விளையாடும்.



லீக் சுற்று முடிவில் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். மற்ற நான்கு அணிகள் தொடரிலிருந்து வெளியேறும்.



இதன் காரணமாக, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.



இந்நிலையில் இன்று இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது, பாகிஸ்தானுக்கு இது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



Mount Maunganui மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.



இந்திய தரப்பில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா அரை சதம் அடித்தனர்.



பாகிஸ்தான் தரப்பில் பந்து வீச்சில் நிதா தர், நஷ்ரா சாந்து தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.



245 ரன்கள் எடுத்தல் வெற்றி என களமிறங்கி பாகிஸ்தான் மகளிர் அணி, 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.



இந்திய தரப்பில் பந்து வீச்சில் ராஜேஸ்வரி கயக்வாட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.



பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் புள்ளிப்பட்டியில் 2 புள்ளிகள் மற்றும் +2.140 ரன் ரேட்டுடன் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.



இந்திய அணி தனது அடுத்து போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி மார்ச் 10ம் திகதி Seddon பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr23

ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்

Nov10

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Jan23

ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி

Jun29

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி

Feb24

ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு

Sep22

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர

Oct02

இந்தோனேசியாவில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து ப

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன

Mar09

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ

Sep16

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந

Feb04

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (19:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (19:40 pm )
Testing centres