More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!
அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!
Mar 06
அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?... எச்சரிக்கை...!

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும் இருக்கிறார்கள்.



மாங்காய், எலுமிச்சை, நார்த்தை, சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன், கோழி என விதவிதமான வகைகளில் ஊறுகாய் தயார் செய்யப்படுகிறது.



அதில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் ஊறுகாய்க்கு கூடுதல் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.



ஊறுகாயில் சேர்க்கப்படும் பொருட்கள் நொதித்தல் முறையில் ஒன்றோடு ஒன்று கலந்து ருசி சேர்க்கின்றன.



இத்தகைய நொதித்தல் தன்மை குடலுக்கு ஆரோக்கியமானது.



எனினும் ஊறுகாயில் உப்பும், எண்ணெய்யும் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.



அவை ஊறுகாயில் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக கலக்கப்படுகின்றன.



ஆனாலும் உப்பில் இருக்கும் அதிகப்படியான சோடியம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது.



பொதுவாகவே அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் இதயத்திற்கு கேடு விளைவிக்கும். உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும்.



எண்ணெய்யில் ஹைட்ரோஜனேட் உள்ளிட்ட மோசமான கொழுப்புகளும் கலந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.



‘‘எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் டிரான்ஸ் கொழுப்பு இதய நோய், உடல் பருமன் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பும் உடலுக்கு தீங்குவிளைவிக்கும்.



உயர் ரத்த அழுத்தம், வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.



மேலும் ஊறுகாயில் கலக்கப்படும் மசாலா பொருட்கள் செரிமான அமைப்பை எரிச்சலூட்டும்.



தரமில்லாத எண்ணெய் ஊறுகாயில் கலக்கப்பட்டால் அதிலிருக்கும் டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்’’ என்று எச்சரிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா.



உடலுக்கு ஆரோக் கியம் சேர்க்கும் ஊறுகாயை தயாரிக்கும் விதத்தையும் விளக்குகிறார்.



‘‘கடுகு எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து ஊறுகாய் தயார் செய்தால் அது குடலுக்கு நலம் சேர்க்கும்.



ஊறுகாய் தயாரிப்புக்கு சேர்க்கப்படும் பொருட்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.



நொதித்தலும் சரியான வழிமுறையில் நடைபெற வேண்டும். எனினும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும்.அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும்’’ என்கிறார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Mar23

சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Oct14

நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க

Feb07

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன

Feb04

பிரசவத்துக்குப் பிறகு  பெண்கள் பலருக்கும்  தமது வய

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Feb07

அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ

Feb22

தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.

Feb25

மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான

Oct17

ஆலிவ் எண்ணெய் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொண்டதா

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Jan27

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (08:59 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (08:59 am )
Testing centres