ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் நடத்திய எறிகனை தாக்குதல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதற்கிடையில் பொதுமக்கள் பாதுகாப்பாக தாக்குதல் பிரதேசங்களில் இருந்து வெளியேறுவதற்கு வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.
இதேவேளை தலைநகர் கியேவின் மேற்கே உள்ள எண்ணெய்க் கிடங்கில் ஏற்பட்ட தீப்பரல், இன்று அதிகாலையில் அணைக்கப்பட்டது.
கிழக்கு நகரமான சுமியில், ரஸ்யாவின் வான்வழி குண்டு தாக்குதல்களால், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை எரியுண்டது.
இதன்போது இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் ஒரு பெண் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் தெற்கில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில், ரஷ்ய எறிகனை தாக்குதல்களால் ஒன்பது மாடிகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தின் 27 அடுக்குமாடி குடியிருப்புகள் தீப்பிடித்து எரிந்தன.
இதன்போது குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா ஏவிய ஏவுகணை சொந்தநா
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோ ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து "ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூல போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன் கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
