More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்
May 08
உக்ரைன் இரும்பு ஆலையில் இருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதை உறுதிப்படுத்தமுடியவில்லை! புதிய தகவல்

உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்களா? என்பதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்று ஆலைக்குள் சிக்குண்டிருக்கும் உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.



மரியுபோலில் உள்ள தளத்தில் உள்ள அசோவ் படைப்பிரிவின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் இன்று செய்தியாளர்களுடன் நடத்திய அரிய இணைய செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளனர்.



இன்றும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து இரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அவர்கள் ஆலையைத் தகர்க்க முயல்வதாகவும் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் உக்ரைன் படையதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு



ரஷ்யாவின் முற்றுகைக்குள் இருக்கும் உக்ரைன் மரியுபோல் இரும்பு ஆலையில் தங்கியுள்ள உக்ரைன் படையினர் இன்று இணையம் மூலமான அரிய செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர்.



இதன்போது அவர்களின் மீட்புக்கான வேண்டுகோள் விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த இரும்பு ஆலையின் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



பொதுமக்கள் வெளியேறியதை அடுத்து, அந்த தளத்தில் ரஷ்யா தனது தாக்குதல்களை முடுக்கிவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.



ஆலைக்குள் இருக்கும் நூற்றுக்கணக்கான உக்ரைனிய படையினர் தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என்று ரஷ்யா நிபந்தனை விதித்துள்ளது.



எனினும் சரணடையப் போவதில்லை என்று ஆலைக்குள் உள்ள உக்ரைன் படையினர் தெரிவித்து வருகின்றனர்.



இந்தநிலையில் இணையவழி செய்தியாளர் சந்திப்பில், அசோவ் படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் டெனிஸ் ரேடிஸ் ப்ரோகோபென்கோ மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராம

Mar10

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Sep20

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா

Mar07

பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்

Jan20

தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ

Mar22

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து க

Nov08

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5

Feb24

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்

Jan29

சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலைய

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

May10

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக 

Apr19

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிர

Feb12

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி

Mar06

உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து

Jul01

உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (04:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 03 (04:29 am )
Testing centres