தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன்பாஸ்சில் நிலைகொண்டுள்ள படையினரும் தன்னார்வலர்களும் போராடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மீதான படையெடுப்புக்கு மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டியு்ளளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் நாசி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றிவிழா அணிவகுப்பு சிவப்பு சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த வெற்றிவிழாவில் உரையாற்றிய விளாடிமீர் புடின், நேட்டோ இராணுவ கூட்டணி, ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அவசியமானது எனவும் படை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது எனவும் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் யுத்தத்தால் துன்பப்படும் குடும்பங்களுக்கு தமது அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு இராணுவ வீரர் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் வேதனை அளிக்கின்றது எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் இருந்த வீரர்களின் ஆரவாரம் மற்றும் ரஷ்ய தேசிய கீதத்துடன் விளாடிமீர் புடின் தனது உரையை நிறைவுசெய்துள்ளார்.
உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் ச
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ வடகொரியா சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அ டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோ டேனியல் கிரேக்கிற்கு, இங்கிலாந் உக்ரைனில் நடந்த சண்டையின் போது பிரான்ஸ் நாட்டவர் ஒருவ
