தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன்பாஸ்சில் நிலைகொண்டுள்ள படையினரும் தன்னார்வலர்களும் போராடுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ரஷ்யா மீதான படையெடுப்புக்கு மேற்குலக நாடுகள் தயாராகி வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டியு்ளளார்.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் நாசி ஜெர்மனியை வென்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றிவிழா அணிவகுப்பு சிவப்பு சதுக்கத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்த வெற்றிவிழாவில் உரையாற்றிய விளாடிமீர் புடின், நேட்டோ இராணுவ கூட்டணி, ரஷ்யாவிற்கு வெளிப்படையான அச்சுறுத்தல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை அவசியமானது எனவும் படை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானது எனவும் விளாடிமீர் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் யுத்தத்தால் துன்பப்படும் குடும்பங்களுக்கு தமது அரசாங்கம் அனைத்தையும் மேற்கொள்ளும் என ரஷ்ய அதிபர் உறுதி அளித்துள்ளார்.
ஒவ்வொரு இராணுவ வீரர் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் வேதனை அளிக்கின்றது எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சிவப்பு சதுக்கத்தில் இருந்த வீரர்களின் ஆரவாரம் மற்றும் ரஷ்ய தேசிய கீதத்துடன் விளாடிமீர் புடின் தனது உரையை நிறைவுசெய்துள்ளார்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உ
மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத
மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
