இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் (Michelle Bachelet) தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட அவர்,

"நேற்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் வன்முறைகள் அதிகரித்ததைக் கண்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
அனைத்து வன்முறைகளையும் நான் கண்டிப்பதோடு, நடந்த அனைத்து தாக்குதல்களையும் சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் உட்பட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவசரகாலச் சூழலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்களை முன்னோக்கி செல்லும் பாதையைக் கண்டறிவதற்கு சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுடனும் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்ட காலமாக பாகுபாடுகளை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் மற்றும் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பரந்த அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அடிப்படைக் காரணங்களைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
கொரோனா தொற்று பாதிப்பால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
ரஷ்யா
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில்
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும
துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி
உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதள நிறுவனமான ட்விட
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந
