நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில், கல்பிட்டி தீவுக்கூட்டத்தில் உள்ள 14 தீவுகளில் இரண்டாவது பெரிய தீவான ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட உச்சமுனி தீவு வெளிநாடு ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீவு 417 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சுவிஸர்லாந்து நாட்டின் நிறுவனம் ஒன்றுக்கு 30 ஆண்டு கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமான உடன்படிக்கை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் கையெழுத்திடப்பட்டதாகவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு சொந்தமான இந்த தீவை குத்தகைக்கு விடுவது தொடர்பில் 2000 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட தொகைக்கு 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது எப்படி என சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
எதனை நிர்மாணிப்பதற்காக இந்த தீவு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவில்லை. பல்லுயிர்களை கொண்டுள்ள இந்த தீவில் நிர்மாணிப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் பெற வேண்டிய சுற்றுச் சூழல் சம்பந்தமான அறிக்கையும் பெறப்படவில்லை என சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இல்லாத சந்தரத்ப்பத்தில் எவரது தேவைக்காக இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சுற்றுலா வழிக்காட்டிகள் சங்கம் கூறியுள்ளது.
லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்த
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின
நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியா
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம் மாத இறு
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
