கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ரஷ்ய படைகள் கடந்த பல நாட்களாக இறங்கி உள்ளன.
இந்த நிலையில் ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுக்க உக்ரைனிய படைகள் ஆற்று பாலமொன்றை அழித்ததால், ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் கூண்டோடு பலியாகி விட்டதாக சர்வதேச தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கிழக்கு உக்ரைனில் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் வழியாக சிவர்ஸ்கி டொனெட்ஸ் என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு மிதக்கும் பாலம் இருந்து வந்தது.
ஆற்றைக் கடந்து வருவதற்கு இந்த பாலம் ரஷ்ய படைகளுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இதை அறிந்து நோட்டமிட்டு வந்த உக்ரைன் படையினர் அந்தப் பாலத்தை அதிரடியாக தாக்கி அழித்தபோது, ரஷ்யாவின் ஒரு படைப்பிரிவினர் ஆற்றில மூழ்கி பலியாகி விட்டதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலத்தின் அருகே நிறுத்தப்பட்ட இராணுவ வாகனங்களையும் உக்ரைன் படையினர் தாக்கி அழித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கூறுகையில்,
“ரஷ்யா குறைந்தபட்சம் ஒரு படைப்பிரிவை இழந்துள்ளது” என தெரிவித்தது. இந்த பாலத்தை அழித்ததையொட்டிய படங்களை உக்ரைன் வான்வழிப்படைகள் வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே உக்ரைன் அதிகாரிகள், கருங்கடலில் ரஷ்ய கப்பல் ஒன்றை தங்கள் படையினர் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது உக்ரைனுக்கு முக்கிய வெற்றி ஆகும்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ர
பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொட
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்க சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ
