காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாணமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, காலி முகத்திடல் உள்ளிட்ட அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் நேற்றைய தினமும் 258 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்களில் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை போராட்டக்காரர்களை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்த
எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மான
பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
