களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துள்ளார்.
நேற்று முன்தினம் பிற்பகல் தனது வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு வாங்கிய கடனை செலுத்த முடியாமல் அவர் இந்த முடிவை எடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை, கமகொட, ஹொரதுவாவத்தையைச் சேர்ந்த நதோஷ் குமார ஜயசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவருக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும் அவர்களில் இருவர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி அண்மையில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் களுத்துறையில் கடலை வியாபாரியாக தொழில் செய்து வந்ததாகவும், அவருக்கு கிடைத்த சுனாமி வீட்டையும் கடன் காரணமாக வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
களுத்துறை நாகொட திடீர் மரண விசாரணை அதிகாரி சுமித் சில்வா முன்னிலையில் மரண விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரி
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒ
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
தற்போது அதிகரித்திருக்கும் பஸ் கட்டணம் போதுமானதல்
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று 2 மணித்தி
நாட்டின் பொருளாதாரத்த
