உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போது எரிந்த கட்டடங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவில் தாக்குதலில் சிதைவடைந்த நகரின் தற்போதைய நிலையை கண்டு மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
மரியுபோலில் இருந்த கடைசி உக்ரேனியத் துருப்புக்கள் ரஷ்யர்களிடம் சரணடைந்ததால், மக்கள் தங்களின் அவல நிலையை எண்ணி வருந்துகின்றனர்.
மரியுபோல் நகரில் வசிப்போர் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து மின்சாரமின்றி தவித்து வருவதுடன், வேலை இல்லாமல் உணவும் தண்ணீரும் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மரியுபோலில் மூன்று மாதமாக இடம்பெற்ற போரில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷ்யாவால் சிதைக்கப்பட்ட உக்ரேனின் தென்கிழக்கு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், அதைக் கடலோர உல்லாசத்தலமாக மாற்றவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது.
அதேவேளை மரியுபோல் நகரில் முந்திய வாரங்களில் இடைவிடாது நடந்த போர் தற்போது குறைந்துவிட்டன எனினும் நகர் முழுவதும் ரஷ்ய ராணுவக் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள
ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜேர்மனி 2,000 கூடுதல் டாங்கி
நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
ஜப்பானில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல
இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தன ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில் ரஷியா - உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளத
