இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட்டிற்கு பக்கபலமாக நின்று அனைத்து வழிகளிலும், அதற்கு உதவுவது புதுடெல்லியின் கடமை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு அத்தியாவசிய உதவி மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றி வந்துள்ள இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். காரியல் கப்பலின் மாலுமிகளுடன் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தது,
இலங்கை, இந்தியாவின் அண்டை நாடாக மாத்திரமன்றி, இந்தியாவின் நண்பனாகவும் உள்ளது. இந்தியா எப்பொழுதும் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது.
அத்துடன், இலங்கை, இந்தியாவின் மூலோபாய பங்காளியாகவும் நெருங்கிய கடல்சார் பங்காளியாகவும் உள்ளது. ஆகவே, நெருக்கடியான நேரத்தில் இலங்கையுடன் நின்று, அதற்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுவது இந்தியாவின் கடமையாகும்.
ஐ.என்.எஸ். காரியல் கப்பல் மற்றும் பிற இந்திய கடற்படைக் கப்பல்கள் நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நிலை பாதுகாப்பாக இருப்பதாக நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT தி
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ
கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ
கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
வவுனியாவில் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
