மோசடிக்கும்பல் ஒன்று லண்டனில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் மத்தியில் கைவரிசை காட்டி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கையடக்க தொலைபேசிக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி குறுந்தகவல் ஒன்று மோசடியாளர்களால் அனுப்பப்படுகிறது.
அந்த குறுந்தகவலில், இணைய வழி ஊடாக வேலை வாய்ப்பு, சம்பளமாக வாராந்தம் 980 பவுண்ட் வழங்கப்படும் என தகவல் பரிமாறுகின்னர்.
இலகுவாக தொழில் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றும், முன் அனுபவங்கள் தேவையில்லை எனவும் அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் விரும்பம் உள்ளவர்கள் இணைப்பை அழுத்துமாறு கூறி குறுந்தகவலுடன் இணைப்பு ஒன்றும் உள்ளடக்கப்படுகின்றது.
அதற்கமைய விரும்பம் உள்ளவர்கள் இணைப்பை அழுத்தினால் அவர்களிடம் ஒரு தொகை பணம் செலுத்துமாறு கோரப்படுகிறது. அதனை நம்பி பணம் செலுத்தும் மோசடியாளர்களின் வலையில் பலர் சிக்கிக் கொள்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது குறித்த நபர்களால் வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதாகவும் இது தொடர்பான குறுந்தகவல்கள் பல தமிழர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பலர் இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
எனவே இவ்வாறு பணம் பறிக்கும் மோசடியாளர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வல
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப
சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
