இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும், நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு வர்த்தக சம்மேளனம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததன் பின்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியைத் தணிக்க உதவும் எந்தவொரு நிதிப் பாலமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையில் தங்கியுள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜப்பானுடனான முறிந்த உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் அவர்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
அரசியலில் பிரவேசிக்கும் திட்டம் இல்லை என இலங்கை கிரிக
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
நாட்டில் சீமெந்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
இந்த வார நாடாளுமன்ற அமர்வு, இன்றும், நாளையும் என இரு தி
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா க
