இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று மக்கள் வாழ்வதற்கான உரிமையைக்கூட மக்கள் இழந்துள்ளனர். பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக நமது நாட்டின் அறிவார்ந்த இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்ப்பட்டுள்ளது அதன் காரணமாக புத்திசாலிகள் குறைந்த சமூகமொன்று விரைவில் உருவாகும் சாத்தியம் உள்ளது.

தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் அது சார்ந்த செயல்பாட்டு வரைபடம் உரிய கால எல்லையுடன் நடைமுறைப்படுத்தப்படும் வரை எமது நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
அதற்கு புதிய மக்கள் ஆணையுடன் நிலையான அரசாங்கமொன்று தேவை. அவ்வாறு செய்யாமல் மக்களை ஏமாற்றிய வண்ணம் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்று இலங்கைக்கு திரும்ப ம
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் மு
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வத
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
நிதி அமைச்சினால் அறிவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கும்,
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறி
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
