உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது.
ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை ஆய்வு செய்த பிறகு, தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆய்வாளர்கள் வீடியோவில் உள்ள ஆயுதம் உண்மையில் ஹ்வாசாங்-15 என்றும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வடகொரியாவால் சோதனை முன்னெடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, ஏவுகணை சோதனைக்கு பின்னர் கிம் ஜோங் உன் வெளியிட்ட வீடியோ ஒன்று உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. தற்போது, ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்த நிலையில், அதை திசை திருப்பவே, கிம் ஜோங் உன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
வடகொரியாவின் வரலாற்றில் இவ்வாறான ஏவுகணை சோதனை முன்னெடுக்கப்பட்டதில்லை எனவும், இது உலக நாடுகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும் எனவும், வடகொரிய அரசு செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது ஐரோப்பிய யூன
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் மூலம் ரஷ்யா
வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பா
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
