வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபானசாலையில் ஊரடங்கு வேளையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03-04-2022) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஒருவர் தனது மோட்டார் சைக்கிலில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்கு செல்ல முற்பட்டபோது, மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து, அவர் மீது வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில், இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட
அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறு
திருகோணமலை கடல் பிராந்தியத்தில் சிறு படகுகள் மூலம் மீ
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமி
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல
