More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!
Apr 08
திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை போலீசார் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.



வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாத காலத்தில் செல்போன்கள் திருட்டு மற்றும் தவறவிட்டதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார், செல்போன்களின் ஐஎம்ஏ எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் 3 மாதத்தில் மாயமான 100 செல்போன்களில் 60 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு, செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். 



இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், வழிப்பறி, வீடு புகுந்து திருடும் நிலை மாறி தற்போது இணையவழியில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும், நாளுக்கு நாள் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே இணையவழி மோசடியால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தால் தான் மோசடியில் ஈடுபட்டவரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும் என கூறினார். அவ்வாறு இல்லாவிட்டால் மோசடி நபர் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.



மேலும், இணைய வழி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பி பூபதிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr05

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Sep06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம

Aug18

உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியத

Aug21

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண

Jun27
Sep06

இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்

Nov08

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்

Feb10

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இள

Mar06

இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து

Sep25

தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன

Sep16

அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில்

Apr19

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத

Oct24
Jun18

கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:43 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 03 (16:43 pm )
Testing centres