உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந்த போரில் உக்ரைனின் 45 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் 26 லட்சம் பேர் அண்டை நாடான போலந்துக்கும், 7 லட்சம் பேர் ருமேனியாவுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர்.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார்.
போரின் முட்டாள்தனத்தில் கிறிஸ்து மற்றொரு முறை சிலுவையில் அறையப்படுவதை காண்கிறோம். கணவன் மற்றும் மகன்களின் அநியாய மரணம், வெடிகுண்டுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள், எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்கள் ஆகியவையே முட்டாள்தனமான போரின் விளைவுகள். எனவே போரை நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷியா தீமை செய்வதில் மிகப் பெரிய நாடு என்றால், உக்ரைன் தைரியத்தில் பெரிய நாடு என தெரிவித்தார்.
உக்ரைன் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷிய வீரர்கள் மற்றும் அவர்களின் தளபதிகளே பொறுப்பேற்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். அனைத்து ரஷிய வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடைகள் விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவா
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப
ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்
ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் வெளியில் 20 பொதுமக்கள் வரை கொல
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களு
ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்
விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி த
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந
ரஷ்ய இராணுவ விமானம் தெற்கு சைபீரியாவில் குடியிருப்பு
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
