உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந்த போரில் உக்ரைனின் 45 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதில் 26 லட்சம் பேர் அண்டை நாடான போலந்துக்கும், 7 லட்சம் பேர் ருமேனியாவுக்கும் அகதிகளாக சென்றுள்ளனர்.
வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார்.
போரின் முட்டாள்தனத்தில் கிறிஸ்து மற்றொரு முறை சிலுவையில் அறையப்படுவதை காண்கிறோம். கணவன் மற்றும் மகன்களின் அநியாய மரணம், வெடிகுண்டுகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள், எதிர்காலத்தை இழக்கும் இளைஞர்கள் ஆகியவையே முட்டாள்தனமான போரின் விளைவுகள். எனவே போரை நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டு மக்களின் தைரியத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷியா தீமை செய்வதில் மிகப் பெரிய நாடு என்றால், உக்ரைன் தைரியத்தில் பெரிய நாடு என தெரிவித்தார்.
உக்ரைன் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ரஷிய வீரர்கள் மற்றும் அவர்களின் தளபதிகளே பொறுப்பேற்க வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். அனைத்து ரஷிய வங்கிகள் மீதும் பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் தடைகள் விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
தொடர்ந்து 36வது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகருக்கு அ பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம். தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட
