இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அந்நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு தனது அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது என்று உறுதியளிக்கிறேன்.
மக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும், பொறுமையாக இருக்க வேண்டும், தெருக்களில் மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஒவ்வொரு நிமிடமும் இலங்கை விலைமதிப்பற்ற வரவை இழக்கிறது.
எனது குடும்பம் மீது அவதூறு பரப்பப்படுகிறது, அதனை நான் பொறுத்துக் கொள்கிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அந்நாட்டு முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச , அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் காரணமாக மக்களின் வாழ்க்கை மோசமாகி உள்ளதாக
தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அவரது அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமத
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்
2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உ
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க இல
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ர
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
