தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது இரு பிரிவினரிடையே மோதல் வெடித்து.
மோதலில் ஈடுபட்டவர்கள் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீதும் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கல்வீச்சில் போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மோதல் நடைபெற்ற ஜஹாங்கீர்புரி பகுதியில் காவல்துறையினரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது
இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
தாக்கப்பட்ட போதும் பொதுமக்களை அருகில் சென்று சந்திப்
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்
எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிர
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று த
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நக
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
