கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் போது உக்ரைனின் MiG-29 போர் விமானம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யாவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ், தமது படையினர் இரண்டு Tochka-U ஏவுகணைகளையும், ஒரு Smerch ஏவுகணையையும் அழித்ததாகக் கூறினார்.

அத்துடன் பத்து உக்ரைனிய ட்ரோன்களும் அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் உக்ரைனில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் கட்டளைச் சாவடிகள் உட்பட 38 இராணுவ இலக்குகளையும் ரஷ்யப் படைகள் தாக்கியதாக அவர் கூறினார்.
இதேவேளை பரந்த தொழிற்துறை வளாகத்தில் இருந்து உக்ரைனிய குடிமக்களை வெற்றிகரமாக வெளியேற்றியதைத் தொடர்ந்து, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மீதான தாக்குதலை ரஷ்யா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் வெளியேற்றும் நடவடிக்கைக்காக கடந்த இரண்டு நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது
இந்தநிலையில் இன்றைய பொழுதில் இறுதி குடிமகன் ஆலையை விட்டு வெளியேறியவுடன், ரஷ்யா தமது தாக்குதலை ஆரம்பித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஆலைக்குள் மேலும் பொதுமக்கள் காயமடைந்த படையினருடன் தங்கிருப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
ரஷ்யாவில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக
ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
