தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு வருடத்திற்கு சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக நிறுவனமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி தாய்லாந்தின் சியாம் கேஸ் என்ற நிறுவனமே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரு ஆண்டுகளில் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனமானது மெட்ரிக் தொன் ஒன்றுக்கு அறவிட்ட தொகையை விட 9 டொலர் குறைவாக புதிய நிறுவனத்திடமிருந்து எரிவாயுவை பெற முடியும்.
கடந்த 2 ஆண்டுகளாக, ஓமானில் இருந்து நாட்டுக்கு எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எனினும், குறித்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதற்கமைய அடுத்த மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக விலைமனு கோரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய நிறுவனத்திடமிருந்து 9 டொலர் குறைவாக எரிவாயுவை பெற முடியும் என்பதால் நாட்டில் எரிவாயு விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்ட
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிம
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேய
கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்
இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மைய குழுவினால் வெள
இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள
