ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்த செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்குமாறு தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவியை வகித்து வரும் சிரேஷ்ட தலைவருக்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல கட்சிகள் புதிய கட்சியுடன் உடன்படிக்கைகளை செய்து அங்கத்துவத்தை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்க எடுத்துள்ள முடிவு காரணமாக அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
இன்று நாடு முழுவதும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமு
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும் ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுக லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களி எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீத அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந் அண்மையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்
