அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார்.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் மீது விழுந்தது.
இதில் அந்த மாணவியின் கண்ணுக்குக் கீழ் மின்விசிறியின் இறக்கை கீறியுள்ளது. இதையடுத்து அந்த மாணவி உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அந்த அறையில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அந்த மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்த பிறகு தொடர்ந்து அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். தேர்வு முடிவடைந்த பிறகு, அந்த மாணவிக்கு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவி நலமாக உள்ளாதாக அப்பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்..
முன்னாள் முதல்-மந்திரி
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக் தினக்கூலி வேலை பார்க்கும் கேரளாவைச் சேர்ந்த 60 வயது முத நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்ப பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை, எல்லைப்பகுதிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றும சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் சர்வேஷ். இ 15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா
