இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தநிலையில் 74 வருட அனுபவத்தைக் கொண்டு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எநத முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், போரின் பின்னர் 13 வருடக்காலத்தில் கூட வடக்குகிழக்கு கடல் ரீதியான பொருளாதாரம் அனைத்து அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தம் மீண்டும் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறப்படுகின்ற நிலையில் அது நடைமுறையில் இருந்தபோதும் பல கோடி ரூபாய்கள் கொள்ளையிடப்பட்டதாக கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இனவாதத்தை இந்த நாடு என்று கைவிடுகிறதோ அன்றே நாட்டுக்கு விடிவுக்கிடைக்கும் என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.
எதிர்கட்சியின் சார்பில் உரையாற்றியவர்கள் சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டை நடத்தும் கோரியபோதும், புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியை பெற்றுக்கொள்வதில் பின்னிற்கிறார்கள் என்று கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை இன்று இலங்கைக்கு நிவாரணத்தை வழங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , இலங்கையில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி தீர்வு ஏற்பட உதவியளிக்கவேண்டும் என்றும் கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
ஒரு தனி நபரின் தேவைக்காக 22 வது அரசியலமைப்புத் திருத்தம
இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்தி
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
