யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலைப் பதிவு செய்து அதை வைத்து மிரட்டி அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியுடன் இளைஞர் ஒருவர் வீடியோ அழைப்பின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் உரையாடியுள்ளார்.
இதன்போது அந்த உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.
மாணவியுடனான உரையாடல் பதிவை தனது உறவினரான இன்னொரு இளைஞருக்கும் குறித்த இளைஞர் அனுப்பியுள்ளார்.
அவ்வாறு தனது நண்பனின் மூலம் கிடைத்த அந்த வீடியோ பதிவை ஏனையோருக்கும் அனுப்ப உள்ளதாக மிரட்டி மாணவியை அந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அதேவேளை இந்த வீடியோ பதிவு பல இடங்களிலும் பகிரப்பட்டுள்ளது.
மாணவி கல்வி கற்கும் பாடசாலைச் சமூகத்துக்கு இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களால் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் ஊடாக பொலிஸ் நிலையத்துக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வீடியோ பதிவு செய்த இளைஞரும் அதனைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் சில பிரதேசங்களில் மெழுகுவர்த்திகளுக்கு தட்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒ
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
காரைநகர் செம்பாடு எனுமிடத்திலுள்ள மாணிக்கம் நாகேந்த
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளை ச
அடர்ந்த காடுகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்இ வனவளப
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்கள
உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப
கம்பளை கலஹா பகுதியில் 12 வயதான யோகராஜா கலைவாணி எனும்
பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
