போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் செய்கின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியும் மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் சமூக நலன்விரும்பிகளால் இந்த போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தின் போது போதைப்பொருள் இல்லாதொழிப்புக்கான கோஷங்களை எழுப்பியும் வாசகங்களை ஏந்திய சுலோக அட்டைகளை தாங்கியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் ஆகியோரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான வீதி நாடகமொன்றும் இடம்பெற்றது.
அண்மைய காலமாக மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் போதைப்பொருள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அச்சுறுத்தல்களை தொடர்ந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மு
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
மேல்இ சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, ந
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்
