More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மோதவிட்டு குளிர் காய வேண்டாம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்!
மோதவிட்டு குளிர் காய வேண்டாம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்!
Oct 07
மோதவிட்டு குளிர் காய வேண்டாம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்!

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.



யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக  யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப் பண்ணைகள் செயற்படுவதாக எண்ணுகிறோம்.



குறித்த கடற்பகுதிகளில் சீனா நேரடியாக அட்டைப் பண்ணைகளை அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் பல்வேறு தரப்புக்களில் இருந்து எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில் சீனா மறைமுகமாக   கொழும்பு நிறுவனங்கள் ஊடாக முதலீடு செய்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.



வளமான எமது குடாக்கடலின் பல ஏக்கர் பரவைக் கடல் பகுதிகளை முறையற்ற விதத்தில் அட்டைப் பண்ணைகள் அமைத்து வருவதாக அறிகிறோம்.



இயற்கையாகவே மீனினங்கள் இனப்பெருகத்திற்கேற்ற கண்ட மேடை பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட எமது குடாக்கடல் இயற்கையாகவே இறால் உற்பத்தி பெருகும் இடங்களாகவும் காணப்படுகிறது.



இந்த பிரதேசங்களில் அட்டைப் பண்ணைகளை அமைத்து கடல் நீரோட்டங்களை தடுத்து எமது கடலை நாசப்படுத்தும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.



சீனாவின் இத்தகைய செயற்பாட்டினால் மனித உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மிக்க கடல் உணவைப் பெற முடியாத சமூகமாக எம்மை அழிப்பதற்கு சீனா முயல்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.



அதன் ஆரம்ப புள்ளியாக பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சிப் பகுதியில்  சீன முதலீட்டு பிண்ணனியில்  பண முதலைகளினால் ஆரம்பிக்கப்பட்ட பண்ணையால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் உள்ளது.



அதுமட்டுமல்லாது  குறித்த பகுதிகளில் பணத்தை வாரி வழங்கி முறையற்ற அட் டை  ப்பண்ணைகளை நிலை நிறுத்துவதற்காக போராட்டங்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை இடம் பெற்று வருகிறது.



இவ்வாறான போராட்டக்காரர்களால் மீனவ சமூகம் இரண்டாகப் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் நிலையை சீனா உருவாக்கி தனது இருப்பை தக்க வைக்க முயல்கிறது.



30 வருட யுத்தத்தின் பின்னர் முழுமையாக பொருளாதார ரீதியாக கட்டி எழுப்பப்படாத வடபகுதி மீண்டும் சீனாவின் அபிவிருத்தி என்ற யுத்தத்தினால் அழிவடையும் நிலைக்கு தள்ளப்படுகிறது.



மேலும்  சீனா அரசாங்கத்தால் யாழ் பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வருகை தந்து  வழங்கப்பட இருந்த 4.3 மில்லியன் ரூபாவை ஏற்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்தோம்.



இந்நிலையில் கொழும்பில் இருக்கும் சீனாத் தூதரகம் தந்திரமான முறையில்  பல்கலைக்கழ துணைவேந்தர் சற்குணராஜாவை கொழும்புக்கு அழைத்து  நிதியை வழங்கியமை நாகரிகமற்ற செயற்பாடாக பார்க்கிறோம்.



வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள்  பல்கலைக்கழக மாணவர்கள் என பல ஆயிரம் பேர் இன்றும் பொருளாதார ரீதியாக    கட்டியெழுப்புவதற்கு  சீனா உதவி செய்யவில்லை.



சீனா தற்போது உதவி என்ற போர்வையில்  வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளுக்குள்  ஊடுருவுவது ஏதோ ஒரு சதித் திட்டத்தை தனக்கு சாதகமாக நிகழ்த்துவதற்கு  முன்னகர் வதாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்கள் பார்க்கிறோம்.



எமது கடல் எமக்குச் சொந்தமான நிலையில் அட்டைப் பண்ணை என்ற போர்வையில் மீனவ மக்களையும் எமது கடலையும் சீனா கையகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.



ஆகவே தமிழ் மக்களை பொருளாதார நீதியில் அழிப்பதற்காக ஆயுதம் இல்லாத யுத்தத்தை சீனா மேற்கொள்ளுமாயின் மீனவ  மக்களுடன் சேர்ந்து   எமது கடல் வளத்தை  பாதுகாக்க போராடத் தயங்க மாட்டோம் என கூறிக் கொள்ள விரும்புகிறோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb03

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் ச

Sep23

யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு

Mar29

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த

Feb15

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொர

Feb04

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள

Feb04

ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத  நிலையங்களுக்கு இடையில்

Mar03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல

Mar11

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக

Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

Feb02

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு

Oct21

வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள

Sep28

மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட

May13

கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று மக்கள் கற்களை

Feb09

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின

Oct01

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் இலங்கையின

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:30 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (01:30 am )
Testing centres