ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில்இ தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'நாடாளுமன்றத்திற்குள் கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல. ஒரு சிறுபான்மையினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சென்றனர். எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்தது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
எங்களுடைய குறுகிய கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் செய்துகாட்ட விரும்புகிறேன். அதன்படி செயற்படுங்கள்.
தற்போதுஇ கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தில் தேசிய பேரவை நிறுவப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏனைய சபைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் இவற்றை நிரப்ப முடியவில்லை. சிலர் தேசிய பேரவையில் இணைகின்றனர். மற்றவர்கள் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
பா.ஜனதா மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமி
அரசாங்கம் பயங்கரவாதச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க
கொரோனாத் தொற்றுப் பரவல் சவாலை ஒன்றிணைந்து வெற்றிகரமா
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
மின்கட்டணம் செலுத்தாமையால் இன்று (24) குடிவரவு குடியகல்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீ
கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள
