ஜனாதிபதியாக வருவதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு கிடைத்தது என்பது இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் கட்சிப் பிரிவினைகள் இன்றி ஜனரஞ்சகமாக செயற்பட எதிர்பார்க்கும் பின்னணியில்இ தேசிய பேரவை மற்றும் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் பங்கேற்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர் 'நாடாளுமன்றத்திற்குள் கட்சி அமைப்பிலிருந்து குழுக்கள் உருவாகியுள்ளன.
ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நான் ஜனாதிபதியானேன் என்பது இரகசியமல்ல. ஒரு சிறுபான்மையினர் மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் சென்றனர். எனக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு கிடைத்தது. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எனக்கு வாக்களித்தனர்.
எங்களுடைய குறுகிய கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நான் செய்துகாட்ட விரும்புகிறேன். அதன்படி செயற்படுங்கள்.
தற்போதுஇ கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்றத்தில் தேசிய பேரவை நிறுவப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏனைய சபைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் இவற்றை நிரப்ப முடியவில்லை. சிலர் தேசிய பேரவையில் இணைகின்றனர். மற்றவர்கள் வருவதில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்
இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சின்ன ஊறணி, கர
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி நாட
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து ந
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
கிளிநொச்சியில் உயிரிழந்த ஒருவருக்குக் கொரோனா வைரஸ் த
தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரச
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
