அரசாங்கம் அதிகளவில் வரிகளை விதித்துள்ளதன் காரணமாக தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றுவோர் நாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளதாக இலங்கை கணனி தொழிற்நுட்ப சபையின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.
தகவல் தொழிநுட்பத்துறையில் பணம் சம்பாதிக்கும் பலர் இருக்கின்றனர். எனினும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்ய அவர்கள் விரும்பவில்லை.
தகவல் தொழிநுட்பத்துறையின் ஊடாக ஐந்து பில்லியன் டொலர்களை கொண்டு வர முடியும். அதற்கு அரசாங்கத்தின் உதவிகள் அவசியம் எனவும் ஹெட்டிஹேவா கூறியுள்ளார்.
அதேவேளை தம்மிடம் அறவிடப்படும் வரி வருமானத்தை நாட்டின் கல்வி மற்றும் புதிய உற்பத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு தகவல் தொழிநுட்பத்துறையில் இருப்போர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரியை செலுத்த தமக்கு சில காலஅவகாசம் வழங்கினால் 30 வீத வரியை செலுத்துவதில் சிக்கல் இல்லை என இலங்கை கணனி தொழிநுட்ப சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் ஹெட்டிஹேவா மேலும் கூறியுள்ளார்.
உலகமே வியந்து பொறாமைப் பட்ட உச்ச நிலையைத் தொட்ட ஆப்பி
ரஷ்யாவில் டிக்டோக் செயலி தனது சேவையை நிறுத்தி உள்ளதாக
இப்போது டிஜிட்டல் சந்தையில் ஸ்மார்ட்வாட்ச்சுக்கே கட
நோக்கியா, ஒப்போ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு இந
தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெ
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு
உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவ
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கு
என்னதான் ஸ்மார்ட்போன்களை நிறைய விலை கொடுத்து வாங்கின
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற
உலகின் மிக நீளமான கார் என்ற கின்னஸ் சாதனையை அமெரிக்கா
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணி இருக்கும
ஆப்பிள் நிறுவனமானது ஐபோனிற்கான அப்டேட்களை வழங்கிகொண
உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெய
இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டே
