பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மேலும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க தாம் தயார் என்றும் அதற்காகவே தொகுதி மட்டத்தில் கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டிய தொகுதி கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது.
சிலர் உண்மையாகவே 'சிஸ்டம் சேன்ஞ்'க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர்.
இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம்.
ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. 'கள்ளன்', 'கள்ளன்' என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.
ராஜபக்சவிடம் கறுப்பு பணம் உள்ளது என கூறியவர்கள் கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள்' என்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்குத் தீர்வு கிடைக்கும் என எமத
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
அடுத்த 24 மணித்தியாலங்களில் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
