More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
Oct 17
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.



இலங்கை  தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.



இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில் மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி. புலக்ஷன், சசிக்குமார்,கணுவியா, சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.



தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் திட்டிலிருந்து  இலங்கைத்  தமிழர்களை ஹோவர்  கிராஃப்ட் படகு  மூலம் மீட்டு  தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct18

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள

Mar25

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில

Apr30

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு

Apr03

கடந்த சில நாட்களில், 87,000 குடும்பங்கள் கட்டணம் செலுத்தா

Feb12

பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர

Feb12

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர

Jan21

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில

Feb02

பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி

Mar27


நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தாம் செலுத்த வ

Jul24

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த

Sep21

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவன

Jul17

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக

Oct02

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங், பிரித்தான

Jan12

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து

May27

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (10:28 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Feb 01 (10:28 am )
Testing centres