More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!
Oct 17
சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில் மக்களை தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை வழங்கும் சட்டமூல வரைவை இலங்கை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



குறித்த கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தடுத்து வைக்கப்படுபவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என தெரிவித்துள்ளது.



கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு, குறித்த புனர்வாழ்வு மையங்களில் போதைக்கு அடிமையானவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை, தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் வேறு ஏதேனும் குழுவை சேர்ந்தவர்கள் வலுக் கட்டாயமாக காவலில் வைக்க அனுமதிக்கும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிடுகிறது.



புனர்வாழ்வு பணியக சட்டமூலமானது, 'புனர்வாழ்வு' மையங்கள் இராணுவத்தினரை பணியாளர்களாக கொண்ட? பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் புதிய நிர்வாகக் கட்டமைப்பை நிறுவும்.



ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி மனித உரிமைகள் சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இந்த சட்டமூலமானது புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுவதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



எனினும் எந்தவொரு குற்றத்திலும் தண்டனை பெறாதவர்களை வலுக்கட்டாயமாக 'புனர்வாழ்வு' செய்வதற்கான தன்னிச்சையான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



'உத்தேச புனர்வாழ்வு பணியக சட்டமானது குற்றஞ்சாட்டப்படாத ஒருவரை தடுப்புக்காவலில் வைப்பதன் புதிய வடிவம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.



அத்துடன் 'புனர்வாழ்வு சட்டமூலம், சித்திரவதை, தவறான சிகிச்சை மற்றும் முடிவில்லாத காவலில் வைக்கப்படுவதற்கான கதவைத் திறக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



புனர்வாழ்வு சட்டமூலம் என்பது இலங்கையில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளை அங்கீகரிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு நெருக்கமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr07

அச்சுவேலி - வளலாயில் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து

Oct02

 மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர

Jul20

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்

Apr11

வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா

May15

இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த

Mar17

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ

Mar08

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமரு

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

Feb18

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ

Mar08

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள

Apr02

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரல

Jan11

இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்

Mar12

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு

Mar18

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித

Mar06

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (23:44 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 08 (23:44 pm )
Testing centres