நாட்டின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் நான்கு பேர் சரியான ஊட்டச்சத்தான உணவைப் பெறுவதில்லை என்றும் மக்களின் வருமானத்தில் 75% உணவுக்காகவே செலவிடப்படுவதாகவும் தேசிய பேரவையின் துணைக் குழு வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய பேரவையின் உப குழு நாடாளுமன்றத்தில் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் பத்து வருடங்களாக நாட்டில் போசாக்கு குறைபாடு நிலைமை அதிகரித்துள்ள நிலையில் அந்த நிலைமையை களைவதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் வருமானம் மற்றும் வீட்டுச் செலவு குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே தற்போதைய நிலைவரத்தை கருத்திற்கொண்டு, பாடசாலைகளுக்கு வரும் மாணவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இதன்போது கூறப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் 300 ஆசிரியர்களைப் பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பேராசிரியர் வசந்த அத்துகோரல குறித்த குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.
வீறு நடைபோட்டு மீண்டும் அரசியல் களத்தில் இறங்கிய ராஜப
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவசரம
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
வெளிநாட்டில் இருக்கும் மனைவியிடம் இருந்து பணம் பெ
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட
