நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்கின்றமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கும் நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நன்றி தெரிவித்தார்.
அதிபரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 8 பேரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் வரை தண்டனை வழங்கப்பட்டவர்கள் என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் கூறினார்.
'இவர்களின் விடுதலை தொடர்பாகச் சிறைச்சாலை திணைக்களத்தினரிடம் நான் தொடர்பு கொண்டபோது குறித்த 8 பேரை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்திருக்கின்றது எனவும், 8 பேரும் தீபாவளி தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் அவர்கள் அறிவித்தனர்' என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.
அத்துடன் விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டுள்ளார். அவர்களின் பெயர்கள் வருமாறு,
01) வரதராஜன்
02) ரகுபதி சர்மா
03) இலங்கேஷ்வரன்
04) நவதீபன்
05) ராகுலன்
06) காந்தன்
07) சுதா
08) ஜெபநேசன். ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
