வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள்ளுர் விவசயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்த நெல் ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா மாவட்ட நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கையில் கடந்த அறுவடையின் போது விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்த ஆலை உரிமையார்கள் அதனை அரிசியாக்கி விற்பனை செய்ய முற்படும் போது வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதனால் அலை உரிமையாளர்கள் மாத்திரமின்றி விவசாயிகளும் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லை தற்போது அரிசி ஆலை உரிமையார்கள் குறித்த விலைக்கு விற்பனை செய்யமுடியாமையில் அரிசி ஆலைகளில் அரிசி தேங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கால போக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் நெல் ஆலை உரிமையார்கள் நெல்லை கொள்வனவு செய்வதற்கு முடியாத நிலை ஏற்படும் இது விவசாயிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அரசாங்கம் உள்ளுர் விவசாயத்தினை மேம்படுத்தவும் உள்ளுர் வர்த்தகர்களை நட்டமடையாது பாதுகாக்கவும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்வதனை தடை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில
தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்க
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
