More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா
Sep 08
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடை - ஐநா

இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும், சர்வதேச சட்டத்தின்படி செயற்படுமாறும் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.



ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்த வேண்டும் 



மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.



இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் ஏற்கனவே ஜெனிவா சென்றுள்ளனர்.



நாகரீக உலகம் ஏற்றுக்கொள்ளாத கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதையும், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



அத்துடன், நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னேற்றமடையாமல் இழுத்தடித்து வருவது குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.



சர்வதேச ஆதரவுடன் விசாரணைக்கு கோரிக்கை 



வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறவும், பாதுகாப்புப் படைகளை சீர்திருத்தவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.



இலங்கை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது எனவும் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ வீரர்களின் விடுதலையை ரத்து செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பிலான அறிக்கையில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொடவின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct20

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ

Jun20

எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட

Feb27

இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம

Feb03

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை

Mar07

 நாடு முழுவதும் எரிவாயு, கோதுமை மா தட்டுப்பாடு மற்று

Mar14

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய

Jan30

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

May29

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற

Apr08

நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே

Apr05

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல எனவும் ஆதிக் குடிகளாக தமிழ

May13

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ

Sep21

மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அற

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 09 (00:39 am )
Testing centres