சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பதற்கு மோட்ட வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான அட்டை கையிருப்பில் குறைவாக இருப்பதன் காரணமாக ஆறு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான சாரதி அனுமதி பத்திரமொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விநியோகித்து வருகிறது.
இவ்வாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டிருந்த 6 மாத காலத்திற்கு செல்லுபடியான வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தையே ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகக் கூடியதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாவதுஇ
'இதற்காக மாவட்ட செயலகங்களில் பிலியந்தலையில் உள்ள வேரஹெர அலுவலகத்திற்குச் சென்றுஇ ஆறு மாத செல்லுபடி காலத்தை ஒரு வருட காலமாக நீட்டித்துக் கொள்ளலாம்.
வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு மாத்திரமே கையிருப்பிலுள்ள அட்டைகளைக் கொண்டுஇ மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வாகன சாரதி அனுமதிப் பத்திர அட்டை புதிதாக விநியோகிக்கப்பட்டு வருகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட 450இ000 அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் சில வாரங்களுக்குள் கிடைக்கும் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட த
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
அமைச்சர் நாமல் ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் சம்பந்தமாக
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில்
