சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, அர்ஜென்டினா வீராங்கனை நாதியா பொடரோவ்ஸ்கா தகுதி பெற்றார். காலிறுதியில் கனடாவின் யூஜெனி பவுச்சார்டுடன் (28 வயது, 902வது ரேங்க்) நேற்று மோதிய நாதியா (25 வயது, 298வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் விளையாடியபோது பவுச்சார்டுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் பவுச்சார்டு தடுமாற, அதை நன்கு பயன்படுத்தி புள்ளிகளைக் குவித்த நாதியா 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 24 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. யூஜெனி - நாதியா மோதிய காலிறுதி ஆட்டத்தை, முன்னாள் நட்சத்திர வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் நேற்று நேரில் பார்த்து ரசித்தார். 2வது செட்டின்போது கனமழை கொட்டியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி
இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர புதுப்பிக
ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
நடப்பு ஐபிஎல் சீசனின் ஐபிஎல் பிளே ஆஃப் குறித்து முக்
இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
