திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோஷத்தை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் 50 வது நாளை குறிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் கையில் பாதாதைகள்இ பலூன்கள் மற்றும் பட்டங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்று குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடகிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலைக்கு பின்னரான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்இ காணிப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பெற வேண்டும்இ கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்இ ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்படக்கூடாதுஇ பயங்கரவாத தடைச் சட்ட திட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்இ மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கு கேள்விக்குறியாக காணப்படுகிறதுஇ எனும் கோரிக்கைள் பொறிக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
க.லவகுசராசா வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளு
இலந்தையடி பகுதியிலிருந்து கேரளா கஞ்சாப் பொதிகளை இரண்
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
