கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இதனையடுத்துஇ இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்தோடு நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
மனித உரிமைகள் பேரவையின் கடந்தகால தீர்மானங்களை போலன்ற
தந்தை,தாய், மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச்
நாளை மறுதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய ச
வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் இருந்து ஆடைத் தொழிலாள
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு
