கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
திரிபோஷா உற்பத்தி நடவடிக்கையின்போது அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும் எனவே குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திரிபோஷா தொழிற்சாலையை நவீனமயப்படுத்துவதற்கு இரண்டு மில்லியன் டொலர்களை சுகாதார அமைச்சுக்கு வழங்குவதற்கு தனியார் துறை உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.
இதனையடுத்துஇ இந்த கருத்து தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
அத்தோடு நாடு முழுவதிலும் உள்ள பல குடும்ப நலப் பணியாளர்களிடமும் இது தொடர்பில் வினவியதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் திரிபோஷாவை வழங்க வேண்டாம் என எந்தவொரு தரப்பினரும் தமது அதிகாரிகளிடம் கோரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகள் பாலியல் வன்முறை
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்ட
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்த
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்
நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக
தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை
